Mittaai Payal

350.00


இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

இறைவன், மனிதன் என்பதெல்லாம் எப்படி ஆண்களாக மனதில் உருவகங்களை உருவாக்கியதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அதுபோல் கவிதை என்றாலே அது பெண்களுக்கானவை என்று முடிவாகிவிடுகிறது.
பெண்களுக்காக எத்தனை எத்தனை கவிதை படைப்புகளை உருவாக்கினாலும் அது அத்தனைக்கும் அழகான பெயர் கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பெண்களும் கவிதைகளும் வெவ்வேறாகச் சித்தரிப்பது கடினம். சாரலின் சிதறலில் ஒரு க்யூட்டி தேவதை, கஸாட்டா கண்மணி, ரௌத்திர ராசாத்தி, அழகான கொலைகாரி, என் இனிய திமிரழகே போன்ற தலைப்புகள் இதற்கான உதாரணங்கள்.
‘கண் சிமிட்டலுக்கு அடுத்தது என்ன?’ என்று நண்பர்கள் வினவியபோது, தன் காதலனுக்காகக் கண்ணம்மா எழுதும் ஒரு கவிதை தொகுப்பை அடுத்த புத்தகத்தின் யோசனையாகத் தெரிவித்தேன்.

அதன்பின் அழகாக ஒரு விஷயம் என் மனதை ஆக்கிரமித்தது.
ஆண் பெரும்பாலான சமயங்களில் தன்னை ஒரு சூரன் என்று ஏமாற்றிக்கொள்கிறான், அவனது தடுமாற்றங்களை மறைப்பதற்கு கோபத்தை வெளிப்படுத்துகிறான், தன் இயலாமையை மறைப்பதற்கு அகங்காரத்தை வெளிப்படுத்துகிறான். தான் ஒரு ஆண் என்று பிரகடனப்படுத்திக்கொள்வதற்காக அவன் போடும் வேஷங்கள் ஏராளம். அவனைச் சுற்றி ஒரு பாதுகாப்பின்மை எப்போதுமே சூழ்ந்திருக்கிறது.
“சரி இதையெல்லாம் வைத்து ‘கண்ணம்மா’ என்ன கவிதை எழுதப் போகிறாள்” என்கிறீர்களா?

ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள் தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள் ஒளிந்திருக்கும் வெட்கம் இதுவரை அநேகமான கவிஞர்கள் எழுதாமல் விட்ட அபூர்வம். அவனுக்கு நெருக்கமானவர்கள் மீது அவன் காட்டும் அக்கறை ஈடில்லாதவை.

அதைத்தான் இந்தத் தொகுப்பில் ‘கண்ணம்மா’ எழுதியிருக்கிறாள்.
அவனுடனான காதல், காமம், ஏக்கம், அக்கறை, பாசம், தீண்டல், முத்தம், ஊடல், உரையாடல், சமிக்ஞை, சந்தோஷம், சண்டை முதலிய உணர்வுகள் ததும்பும் தருணங்களே ‘மிட்டாய் பயல்’.

‘மிட்டாய்ப் பயல்’ எல்லோருக்குமானதல்ல. ஒரு காதலி தன் காதலனுக்காகவோ, ஒரு மனைவி தன் கணவனுக்காகவோ, பல இடங்களில் நாம் குழம்பித் தவிக்கும் ‘இது என்ன மாதிரியான உறவு’ என்று புரியாத பெண் – ஆண் உறவுக்கு மிட்டாய்ப் பயல் முழுமையாகப் பொருந்திப்போவான்.

…இவை கவிதைகள் அல்ல
கவிதையான தருணங்கள்…

Description

மிட்டாய்ப் பயல்
…இது கண்ணம்மாவின் காதல்…

இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

இறைவன், மனிதன் என்பதெல்லாம் எப்படி ஆண்களாக மனதில் உருவகங்களை உருவாக்கியதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அதுபோல் கவிதை என்றாலே அது பெண்களுக்கானவை என்று முடிவாகிவிடுகிறது.
பெண்களுக்காக எத்தனை எத்தனை கவிதை படைப்புகளை உருவாக்கினாலும் அது அத்தனைக்கும் அழகான பெயர் கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பெண்களும் கவிதைகளும் வெவ்வேறாகச் சித்தரிப்பது கடினம். சாரலின் சிதறலில் ஒரு க்யூட்டி தேவதை, கஸாட்டா கண்மணி, ரௌத்திர ராசாத்தி, அழகான கொலைகாரி, என் இனிய திமிரழகே போன்ற தலைப்புகள் இதற்கான உதாரணங்கள்.
‘கண் சிமிட்டலுக்கு அடுத்தது என்ன?’ என்று நண்பர்கள் வினவியபோது, தன் காதலனுக்காகக் கண்ணம்மா எழுதும் ஒரு கவிதை தொகுப்பை அடுத்த புத்தகத்தின் யோசனையாகத் தெரிவித்தேன்.

அதன்பின் அழகாக ஒரு விஷயம் என் மனதை ஆக்கிரமித்தது.
ஆண் பெரும்பாலான சமயங்களில் தன்னை ஒரு சூரன் என்று ஏமாற்றிக்கொள்கிறான், அவனது தடுமாற்றங்களை மறைப்பதற்கு கோபத்தை வெளிப்படுத்துகிறான், தன் இயலாமையை மறைப்பதற்கு அகங்காரத்தை வெளிப்படுத்துகிறான். தான் ஒரு ஆண் என்று பிரகடனப்படுத்திக்கொள்வதற்காக அவன் போடும் வேஷங்கள் ஏராளம். அவனைச் சுற்றி ஒரு பாதுகாப்பின்மை எப்போதுமே சூழ்ந்திருக்கிறது.
“சரி இதையெல்லாம் வைத்து ‘கண்ணம்மா’ என்ன கவிதை எழுதப் போகிறாள்” என்கிறீர்களா?

ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள் தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள் ஒளிந்திருக்கும் வெட்கம் இதுவரை அநேகமான கவிஞர்கள் எழுதாமல் விட்ட அபூர்வம். அவனுக்கு நெருக்கமானவர்கள் மீது அவன் காட்டும் அக்கறை ஈடில்லாதவை.

அதைத்தான் இந்தத் தொகுப்பில் ‘கண்ணம்மா’ எழுதியிருக்கிறாள்.
அவனுடனான காதல், காமம், ஏக்கம், அக்கறை, பாசம், தீண்டல், முத்தம், ஊடல், உரையாடல், சமிக்ஞை, சந்தோஷம், சண்டை முதலிய உணர்வுகள் ததும்பும் தருணங்களே ‘மிட்டாய் பயல்’.

‘மிட்டாய்ப் பயல்’ எல்லோருக்குமானதல்ல. ஒரு காதலி தன் காதலனுக்காகவோ, ஒரு மனைவி தன் கணவனுக்காகவோ, பல இடங்களில் நாம் குழம்பித் தவிக்கும் ‘இது என்ன மாதிரியான உறவு’ என்று புரியாத பெண் – ஆண் உறவுக்கு மிட்டாய்ப் பயல் முழுமையாகப் பொருந்திப்போவான்.

…இவை கவிதைகள் அல்ல
கவிதையான தருணங்கள்…

Book Details

Weight 0.1 kg
Dimensions 10 × 6 × 2 cm

Reviews

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mittaai Payal”

Your email address will not be published.